.comment-link {margin-left:.6em;}

Sambhar Mafia - Cooked To Kill!

Thursday, January 22, 2009

சன் (பிக்சர்ஸ்) செய்திகள்

பீதிக்கும் பரபரப்புக்கும் பெயர்போன சன் செய்திகளில் நடுநிலையை எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம்தான். சன் தொலைக்காட்சி நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியதிலிருந்து தங்கள் திரைப்படம் சம்பந்தப்பட்ட உருப்படாத செய்திகள் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவது வழக்கமாகியுள்ளது. காதலில் விழுந்தேனில் ஆரம்பித்த தலைவலி படிக்காதவன் வரை தொடர்கிறது. 

இன்றைய தலைப்புச் செய்திகளில் சுள்ளான் தனுஷ் படிக்காதவன் திரைபடத்தை திரையரங்குகளில் ரசிகர்களுடன் கண்டு கழித்தார் எனும் செய்தி தலைப்புச் செய்தியாக இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு உள்நாட்டு அரசியல் செய்திகளை விட படிக்காதவன் செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது எப்படி என்று சற்றும் புரியவில்லை. தங்கள் தொலைக்காட்சி நிறுவனத்தின் பலத்தை கொண்டு சுமாரான படத்தைக் கூட வெற்றிப் படமாக மாற்றுவதே தங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளனர் மாறன் சகோதரர்கள். இந்தப் போக்கு "Editorial Integrity"-யை தொழில் வெற்றிக்காக விட்டுக்கொடுப்பதாகும். விளம்பரதாரர்களுக்கு சாதகமாக செய்திகள் எழுதுவது ஒன்றும் புதிதல்ல. வடக்கில் Times of India போன்ற நிறுவனங்கள் இதை காலம் காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள். இதுமட்டுமல்லாது, சிறந்த பத்து பாடல்கள் & சிறந்த பத்து திரைப்படங்கள் ஆகிய நிகழ்ச்சிகளிலும் தங்கள் சொந்த தயாரிப்பு படங்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. 

மேலும் பல படங்களை தயாரிக்கும் சன் நிறுவனம் தங்கள் செய்தித்தாள், பண்பலை மற்றும் தொலைக்காட்சி மூலம் மக்களை முட்டாள் ஆக்கி படத்தை ஓட வைக்க சகல முயர்ச்சிகளிலும் ஈடுபடும். பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் இவ்வேளையில், சன் செய்திகளை விட அதிக பொழுதுபோக்கு தரக்கூடிய ஒரு நிகழ்ச்சி கிடையாது.

Labels: , , ,

Friday, November 14, 2008

Junior Vikatan on Saravana Bhavan case


Follow up post on Saravana Bhavan Shivakumar's involvement in US Visa Fraud.

Junior Vikatan has a cover story on the same topic with lot of juicy info about the relationship between Shivakumar and his dad Annachi Rajagopal. It also highlights the irregularities going on in some of the overseas operations of Saravana Bhavan.

நம்மூரில் உணவு பரிமாறும் சர்வர்களுக்கு டிப்ஸ் கொடுப் போம். ஆனால், வெளிநாட்டு உணவகங்களில் அந்த டிப்ஸ், சர்வர் முதல் அடுப்படியில் இருக்கும் ஊழியர்வரை போய்ச் சேர்கிற மாதிரியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு உணவகத்திலும் ஒரு பெட்டி இருக்கும். அதில் விருப்பப்பட்டவர்கள் தங்கள் டிப்ஸைப் போடலாம். இரவானதும் அதை உணவக ஊழியர்கள் பிரித்து எடுத்துக் கொள்வார்கள். இப்படித்தான் சிங்கப்பூர் சரவணபவன் கிளையிலும் நடந்து வந்தது. ஆனால், சிவகுமார் பொறுப்பேற்ற பிறகு, டிப்ஸ் பெட்டியைத் தன் வசப்படுத்திக் கொண்டார். அது நிர்வாகத்துக்கே சொந்தம் என்று சொல்லத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர் சிவகுமாரை ஏக வசனத்தில் பேச, இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அது அந்த ஊர் போலீஸ் வரை போக, விவகாரம் சீரியஸானது. பிறகு அந்த ஊழியரின் குடும்பத்தினரிடம் பேசி, கணிசமான தொகை கொடுத்து ஏகப்பட்ட சலுகைகளையும் கொடுத்து சமாதானப்படுத்தினார் சிவகுமார். (விகடன் வழியாக)

Labels: , ,